பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருமலையில் முழு தடை

திருமலை: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்றுகடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்ஒய்.வி. சுப்பா ரெட்டி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சுற்றுச்சூழலை பேணிக் காப்பதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்போதுமே முன்னிலை வகித்து வருகிறது. அலிபிரி முதல் திருமலை வரை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை அமலுக்கு வந்துள்ளது. கடைகள், ஓட்டல்கள், தேவஸ் தான அலுவலகங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட் கள் உபயோகிப்பதில்லை. பக்தர் களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை