காஷ்மீரில் தீ விபத்தில் ஒரு காலை இழந்தாலும் 2 கி.மீ தூரம் தினமும் ஒற்றை காலில் பள்ளி செல்லும் மாணவன்

ஹந்த்வாரா: காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மாணவர் பர்வேஸ். நவ்காம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் ஒரு தீ விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். எனினும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் கொஞ்சம் கூட தணியாதவராக இருக்கிறார். விபத்தில் ஒரு காலை இழந்தாலும், ஒரு கால் போதும். தொடர்ந்து படிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அதற்காக தினமும் 2 கி.மீ. தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வர தொடங்கினார்.

இந்த விடா முயற்சி குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 14 வயது பர்வேஸ் கூறும்போது, ‘‘எனது ஒரு காலிலேயே 2 கி.மீ. தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறேன். ஆனால், பள்ளிக்கு செல்லும் சாலைதான் சரியில்லை. எனக்கு செயற்கை கால் கிடைத்தால், என்னாலும் நடந்து செல்ல முடியும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கனவுடன் இருக்கிறேன்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை