424 முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு - பஞ்சாப் மாநில அரசு தகவல்

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, 424 முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பைக் குறைத்தது. இதில் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். இந்நிலையில் மே 29-ம் தேதி அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பாதுகாப்பைக் குறைத்ததற்காக ஆம் ஆத்மியை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஓபி சோனி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏன் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று பஞ்சாப் ஆம் ஆத்மியை நோக்கி கேள்வி எழுப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை