காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை - இந்துக்கள் மீது 3 நாட்களில் இரண்டாவது முறையாக தாக்குதல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இங்கு பணியில் சேர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை