உ.பி. எம்எல்ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக உயர்வு - முதல்வர் யோகியின் முடிவுக்கு அகிலேஷ் பாராட்டு

புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யில் எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உள்ளது. இதை ரூ.5 கோடியாக உயர்த்தும்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் பகுஜன் சமாஜின் உமா சங்கர் சிங், காங்கிரஸின் ஆராதனா மிஸ்ரா உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் யோகி தனது பட்ஜெட் விவாதத்துக்கான பதிலில் தெரிவித்தார்.

இதுகுறித்து கடந்த சட்டப்பேரவை கூட்ட இறுதிநாளில் முதல்வர் யோகி பேசுகையில், “உ.பி.யின் மக்கள்தொகை சுமார் 25 கோடியாக உள்ளது. இங்குள்ள 75 மாவட்டங்களும் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி சரிசமமாக முன்னேற வேண்டும். அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி என்பதே எங்கள் அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை