“21-ம் நூற்றாண்டு இந்தியா, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது” - பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான உறுதி மொழிகளை ஏற்பதற்கான தருணம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சககளின் வாரந்திரப் பெரு விழாவினை இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் கடன்சார் திட்டங்களுக்கான தேசிய இணையதளம் ஜன் சமர்த்-ஐயும், கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களும் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த மின்னணு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விடுதலைப்பெருவிழாவின் சின்னம் பொறிக்கப்பட்ட சிறப்பு ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வெளியிட்டார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 6-11 வரை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை