திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ. 10 கோடி நன்கொடை - திருநெல்வேலி பக்தர்கள் வழங்கினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகபட்ச நன்கொடை இது என தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் உண்டியல் மூலமும் நேரடியாகவும் பல்வேறு காணிக்கைகளை செலுத்துகின்றனர். தங்கக் காசுகள், வைரம், வைடூரியம், மரகதம் பதித்த ஆபரணங்கள், வீட்டு மனைப் பட்டாக்கள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்கள் என ஏராளமான காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இதனால், உலகிலேயே பணக்கார கடவுள் என திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அழைக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை