2006 வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு

காஜியாபாத்: வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி வலியுல்லா கானுக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்து காஜியாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்து பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஹனுமன் கோயில், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 28 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் என போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை