வடமாநில மக்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை அயோத்திக்குள் ராஜ் தாக்கரே நுழைய முடியாது - பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் எச்சரிக்கை

புதுடெல்லி: மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் பாங்கு முழக்கத்துக்கான ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி வருகிறார். இதனால் மகாராஷ்டிர எதிர்க்கட்சியான பாஜகவுடன் நெருக்கமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

இச்சூழலில் வரும் ஜூன் 5-ம் தேதி, உ.பி.யின் அயோத்திக்கு செல்லவிருப்பதாக ராஜ் தாக்கரே அறிவித்துள்ளார். ஆனால் இவரது பயணத்துக்கு அயோத்தி அருகிலுள்ள கோண்டா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை