கடந்த ஆண்டு வெள்ளத்தால் சேதமடைந்த திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு பாதை மீண்டும் திறப்பு

திருப்பதி: திருப்பதி ஸ்ரீநிவாச மங்காபுரம் அருகே உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மிகவும் பழமையானது. அலிபிரி மலைப்பாதையை விட இப்பாதை வழியாக திருமலைக்கு சென்றால் விரைவாக செல்லலாம். படிகளும் குறைவு. இதனால், இதனை அறிந்த பக்தர்கள் பலர் இப்பாதை வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம்.

விஜயநகர பேரரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் உட்பட பல மன்னர்கள், ஆழ்வார்கள் கூட இப்பாதை வழியாகத்தான் திருமலை சென்றடைந்தனர் என கூறப்படுகிறது. ஏழுமலையான் கூட திருமணம் செய்த பின்னர் இவ்வழி மூலமாகவே திருமலைக்கு சென்றார் என புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த பாதை, கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், இப்பாதை மூடப்பட்டது. அதன் பின்னர் மராமத்து பணிகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை