இப்போதைக்கு கட்சி இல்லை, பிஹாரில் 3,000 கி.மீ. பாத யாத்திரை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் பிஹார் முழுவதும் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பாத யாத்திரை செல்ல இருப்பதாகவும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து அடுத்து வரும் குஜராத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக சில ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை