IND vs AFG 3-வது டி20 | தோல்வி பயம் காட்டிய ஆப்கானிஸ்தான்; டபுள் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

பெங்களூரு: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடின. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 212 ரன்கள் எடுத்தன. அதன் காரணமாக ஆட்டத்தில் முடிவை எட்ட இரண்டு முறை (டபுள்) சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை