வடமாநிலங்களில் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, ரயில்கள் தாமதம், பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: வடமாநிலங்களில் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன்காரணமாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை