நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா: பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் இன்று 75-வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு 10 மணி முதல் டெல்லியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை