டெல்லியில் முப்படை அணிவகுப்புகளுக்கு பெண்கள் தலைமை தாங்கினர் - தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர்

புதுடெல்லி: நாட்டின் ராணுவ வலிமை, அறிவியல் வளர்ச்சி, கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.

நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். 10.25 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், 21 பீரங்கி குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை