எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலமாக விண்மீன் வெடிப்பு எச்சங்களின் தரவுகள் சேகரிப்பு

சென்னை: வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வாயிலாக காசியோபியா-ஏ எனும் விண்மீன் வெடிப்பு எச்சங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன.1-ம் தேதி பூமியில் இருந்துசுமார் 650 கி.மீ உயரம் கொண்டசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை