இஸ்ரேல் நாட்டில் வேலை | ஹரியாணா அரசு ஆட்சேர்ப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புதுடெல்லி: காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்யும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா அரசு, இஸ்ரேலில் உள்ள 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்களை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. தச்சர்கள், பீங்கான் டைல்ஸ் ஒட்டுநர்கள், மேஸ்திரிகள், உருக்காலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.1.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை