“தேநீர் விற்றவர் பிரதமர், ஆட்டோ ஓட்டுநர் முதல்வர்” - சிவ சேனாவில் இணைந்த மிலிந்த் தியோரா பேச்சு

மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணியில் இணைந்துள்ளார் மிலிந்த் தியோரா. இந்நிலையில், அவர் எக்ஸ் தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.

“நான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனாவில் இணைந்தேன் என்பதை என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு சில துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால், அது கேட்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் 20 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன். எனது குடும்பம் 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்துள்ளது. எப்போதும் மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்திய தேசத்தின் நலனுக்காகவே நான் பணியாற்ற விரும்புகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை