‘தேச ஒற்றுமையை வலுவாக்க சபதம் ஏற்போம்’ என வலியுறுத்தல்: பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உற்சாகம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி அணிந்து பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘‘தேச ஒற்றுமையை வலுவாக்க நாம் சபதம் ஏற்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது அரசு குடியிருப்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர்நரேந்திர மோடி இதில் கலந்துகொண்டார். தமிழர் பாணியில் வெள்ளை வேட்டியுடன், கோட் மற்றும் சால்வைஅணிந்திருந்த பிரதமர், அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையை வணங்கிவிட்டு, அதில் சர்க்கரையை கலந்து மகிழ்ந்தார். அருகே கட்டப்பட்டிருந்த பசுங்கன்று மீது மலர்களை தூவி வணங்கி, வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை