எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத இண்டியா கூட்டணி: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா: பதவியேற்பு விழாவுக்கு முன்பு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ‘‘பிஹாரில் தற்போதைய கூட்டணியோடு (ராஷ்டிரிய ஜனதா தளம்) இணைந்து அரசை நடத்த முடியவில்லை. அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்து பேசினேன். கூட்டணியில் இருந்து வெளியேற அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தேசிய அளவிலான இண்டியா கூட்டணியும் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. தற்போது பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளேன்’’ என்றார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் கூறியபோது, ‘‘தேஜஸ்வி யாதவ் எதுவுமே செய்யவில்லை. இருந்த இடத்துக்கே திரும்பி வந்துள்ளேன். இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன். நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை