முதல்வராக 9-வது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி

பாட்னா: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. முதல்வராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தளம், பாஜக ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை