“எங்கள் இருவரது பார்வையும் ஒன்றாக உள்ளது” - பவன் கல்யாணை சந்தித்தது குறித்து ராயுடு ட்வீட்

விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை அண்மையில் சந்தித்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசியல் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கும் வகையில் ராயுடுவின் செயல்பாடு இருந்தது. அந்த வகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஒரே வாரத்தில் கட்சியில் இருந்து விலகினார். துபாயில் நடைபெற உள்ள ஐஎல்டி20 தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளதாகவும் அதற்கு விளக்கம் கொடுத்தார். இருந்தும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்த அடுத்த சில நாட்களில் பவன் கல்யாணை அவர் சந்தித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை