இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு: கடற்படை கமாண்டோக்கள் உள்ளே புகுந்து நடவடிக்கை

புதுடெல்லி: சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி மீட்டனர்.

அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்தமாதம் 23-ம் தேதி 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்.வி. கெம் ப்ளூட்டோ என்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதேபோல் 25 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்.வி.சாய்பாபா கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை