மக்களவை தேர்தலுக்காக பிஹாரில் ஜன.13-ல் பிரச்சாரம் தொடங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சாலைகள், பாலங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும் 13-ம்தேதி பிஹார் செல்கிறார். சம்பரான் பகுதியில் பேட்டியா நகரில் உள்ள ராமன் மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதுவே மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கான தொடக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை