புதிய கரோனா வைரஸுக்கு தடுப்பூசி தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. கடந்த 2021 ஏப்ரலில் 2-வது கரோனா அலை உச்சத்தை தொட்டது. 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம்தொடங்கப்பட்டது. 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுமார் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் சுமார் 88 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டபோது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, 23 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை