இந்தி பேசும் உ.பி., பிஹார் மக்களை தயாநிதி மாறன் இழிவுபடுத்தி பேசுவதா? - ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக கண்டனம்

‘‘உத்தர பிரதேசம், பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியதற்கு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு, 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த திமுக எம்.பி. செந்தில்குமார், ‘பசு கோமிய’ மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை