“AI தொழில்நுட்பத்தால் பணியிழப்பு கவலை வேண்டாம்” - நிர்மலா சீதாராமன்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் பணியிழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை - மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“1980-களில் வங்கிகளில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது ஊழியர்களுக்கு மாற்றாக கம்ப்யூட்டர் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளன. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்து கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை