ரூ.15,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். ரூ.15,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து லக்னோ மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறியதாவது:

பிரதமரின் வருகைக்கு முன்னதாக பிரதமரின் பாதுகாப்புக்காக உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்), தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மற்றும் பிறபாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த,போக்குவரத்து திசை திருப்பும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் காவல் துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை