உத்தராகண்ட் இடைத்தேர்தலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமோக வெற்றி

டேராடூன்: கடந்த 2012 முதல் 2017 வரை உத்தராகண்ட் எம்எல்.ஏ.வாக இருந்து வந்த புஷ்கர் சிங் தாமி கடந்தாண்டு முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளரிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்தனர்.

6 மாதத்துக்குள் புஷ்கர் சிங் தாமி எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதால், அவர் சாம்பவாட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்மலா கதோரி என்பவர் போட்டியிட்டார். இங்கு கடந்த மாதம் 31-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை