கான்பூர் கலவரத்தில் கைதானவருக்கு பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பு?

கான்பூர்: உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள பரேடு பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் செய்தி பரப்பப்பட்டதால், கடந்த 3-ம் தேதி இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டது ஹயத் ஜாபர் ஹஸ்மி மற்றும் அவரது 3 கூட்டாளிகள்தான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. லக்னோவில் ஹஸ்ரத்கன்ஜ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். கான்பூர் வன்முறை தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை