பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம் - பூர்வீக கிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு

சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் உடல் அவரது பூர்வீக கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மான்சா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு காரில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை வழிமறித்து துப்பாக்கியால் சரிமாரியாக சுட்டதில் சித்து மூஸ் வாலா உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை