உ.பி. சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 11 பேர் உயிரிழப்பு - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து நேரிட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டம் டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஹாபூர் மாவட்டத்தின் தவுலானா பகுதியில் ஏராளமான ஆலைகள் செயல்படுகின்றன. அங்குள்ள ஓர் ஆலையில் நேற்று பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து நேரிட்டது. இதன் காரணமாக ஆலை முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை