IPL 2022 | விமர்சனங்களை தகர்த்த குஜராத் அணி

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கிய போதிலும் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சிய நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வியக்கவைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கடினமான ஆடுகளத்தில் ஷுப்மன் கில்லின் (63 ரன்கள்) உதவியுடன் 144 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் ரஷித் கான், சாய் கிஷோர், யாஷ் தயாள் ஆகியோரது நேர்த்தியான பந்து வீச்சால் லக்னோ அணியை 82 ரன்களுக்கு சுருட்டி மிரளச் செய்தது குஜராத் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை