உ.பி.யில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டம் - ஆக்ராவில் 80% அமல்படுத்தி தமிழரான உதவி ஆட்சியர் சாதனை

புதுடெல்லி: உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் சுமார் 25 சதவிகித அளவிலான குழந்தைகளே அன்றாடம் வருகை தருகின்றனர். இதற்கு அதன் ஆசிரியர்கள், அடிப்படை வசதி, கரோனா பரவல் உள்ளிட்டப் பலவும் காரணமாயின. இதை உணர்ந்த பாஜக ஆளும் ஆட்சியின் முதல்வர் யோகி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். ‘ஸ்கூல் சலோ அபியான்’ எனும் பெயரிலான இத்திட்டம், சுமார் 5 வயதுள்ள குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதாகும். இது, கடந்த ஏப்ரல் 4 முதல் மே 4 வரை என ஒரு மாதத்திற்கு அமல்படுத்தப்பட்டது.

இதில், உ.பி.யின் 75 மாவட்டங்களை விட அதிக எண்ணிக்கையில் சுமார் 80 சதவிகித குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ஆக்ரா சாதித்துள்ளது. இதன் பின்னணியில் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரான தமிழர் எம்.மணிகண்டன் ஐஏஎஸ் இருந்துள்ளார். இதற்காக அவர், கூகுள் அட்டெண்டென்ஸ், வீடுகளுக்கு நேரடியாக ஆசிரியர்களை அனுப்புதல், பஞ்சாயத்து தலைவர்கள் உதவி, அன்றாடம் இணையதளக் கூட்டங்கள் எனப் பல உத்திகளை பயன்படுத்தி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை