IPL 2022 | நடப்பு சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டான கோலி

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி.

கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 23650 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ளார். இது தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை