வங்க கடலில் அசானி புயல் உருவானது: ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் கனமழை எச்சரிக்கை

புது டெல்லி: தென்கிழக்கு வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. இந்த புயல் அந்தமான் தலை நகர் போர்ட் பிளேரில் இருந்து 380 கி.மீ. ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. ஒடிசாவின் புரியில் இருந்து 1,030 கி.மீ. தொலைவில் நிலை கொண் டிருக்கிறது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை