கியான்வாபி மசூதி கள ஆய்வின் நீதிமன்ற ஆணையர் அகற்றம் - சிவலிங்கத்தை சுற்றியுள்ள ஒசுகானா சுவரை இடிக்கும் மனு மீது நாளை முடிவு

புதுடெல்லி: சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கில், தாம் அமர்த்திய களஆய்வின் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை வாரணாசி சிவில் நீதிமன்றம் அகற்றி உத்தரவிட்டது. கியான்வாபியில் சிவலிங்கத்தை சுற்றியுள்ள ஒசுகானா சுவரை இடிக்கும் மனு மீது மே 19-ல் முடிவு எடுக்கப்பட உள்ளது.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், ஆணையராக மூத்த வழக்கறிஞரான அஜய் குமார் மிஸ்ராவை அமர்த்தி, நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. ஒசுகானாவை சீல் வைத்து தொழுகைக்கும் தடை விதிக்க வேண்டும் என பெண் மனுதாரர்களின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை