சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததில் ரூ.50 லட்சம் லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ திடீர் வழக்குப்பதிவு முழுவிவரம்

புதுடெல்லி: கடந்த 2009-2014-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற்றது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2018-ம் ஆண்டும், ப.சிதம்பரம் 2019-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை