25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி: அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரையாகும். அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை