IND vs ENG டெஸ்ட் தொடர் | முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு: துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியின் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷானுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் துருவ் ஜுரல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய போது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருந்தது. அதன்பிறகு அந்த அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பாணி முற்றிலும் மாற்றம் கண்டது. பாஸ்பால் அணுகுமுறை மூலம் அந்த அணி அதகளம் செய்து வருகிறது. இந்த சூழலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை