IND vs AFG 2-வது டி20 | ஜெய்ஸ்வால் + துபே அதிரடி பேட்டிங்: தொடரை வென்றது இந்தியா!

இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. 173 ரன்களை விரட்டிய இந்திய அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் துபே இணைந்து அதிரடியாக பேட் செய்து ரன் குவித்தனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை