மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி போட்டி?

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரங்களை துவக்கத் தயாராகி வருகின்றன. இவற்றில் முக்கியத் தலைவர்கள் போட்டியும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவரான சோனியா காந்தி (78), கடந்த 2004 முதல் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வென்று வருகிறார். முதுமை காரணமாக பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக் கொண்ட இவர், தற்போது தேர்தல் போட்டியில் இருந்தும் விலக விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சோனியா காந்தி முதன்முறையாக கடந்த 1999-ல் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதியில் போட்டியிட்டு வென்றிருந்தார். இதில் பெல்லாரி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த அவர் அமேதி எம்.பி. பதவியில் தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை