‘துடிப்பான குஜராத்’ மாநாடு | வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற மோடி சபதம்

காந்தி நகர்: வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்பதற்கு, தான் உத்தரவாதம் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

‘துடிப்பான குஜராத்’ உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதார வரிசையில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. இன்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்து. ஆனால், அது நடக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை