அமைச்சரவையை மட்டும் மாற்றியமைக்க நிதிஷ் குமார் முடிவு: பாஜக ஆதரவுடன் பிஹாரில் புதிய ஆட்சி

பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்து புதிய ஆட்சி அமைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தனது கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். பாஜக, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு ‘பல்து ராம்’ (அடிக்கடி கட்சி மாறுபவர்) என்ற புனைப் பெயரும் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை