“கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன்” - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி

அயோத்தி: "உண்மையில் நான்தான் அதிர்ஷ்டசாலி" என அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிற்பி அருண் யோகிராஜ், "இப்போது நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை