மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: தனித்து போட்டியிடுவதாக திரிணமூல், ஆம் ஆத்மி அறிவிப்பு

கொல்கத்தா/ சண்டிகர்: மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி, பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது, இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) உட்பட 28 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் காணொலி வாயிலாகவும் ஒரு கூட்டம் நடந்தது. ஆனாலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை