புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்: லாரி ஓட்டுநர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை லாரி ஓட்டுநர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு லாரி ஓட்டுநர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

புதிய சட்ட திருத்தத்தின்படி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள், தங்களது மூன்று நாள் போராட்டத்தை திங்கட்கிழமை (ஜனவரி 1) அன்று தொடங்கினர். தேசிய அளவில் இந்த போராட்டம் பேசு பொருளானது. இந்நிலையில், போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மத்திய அரசு பிரதிநிதிகளுடன் மோட்டார் வாகன சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை