எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள் நிலைநிறுத்தம்: பிஎஸ்எல்வி-சி58 பயணம் வெற்றி

சென்னை: கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக, எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 2024-ம் ஆண்டின் சிறந்த தொடக்கம் என்று பிரதமர் மோடிபாராட்டு தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் புறஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்களின் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள்கடந்த 2015-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரிய தகவல்களை வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை