மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு அமல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் நடந்துள்ளது. அதையடுத்து தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்துள்ளது அம்மாநில அரசு.

சட்ட ஒழுங்கு சீர்குலைந்த காரணத்தாலும், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு இம்பால் மேற்கு மாவட்டத்தில் உடனடியாக அமல் செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை