கேரள பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

திருவனந்தபுரம்: கேரள பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன். கேரள பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுதலைவராக பதவி வகித்து வந்த அவர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர்19-ம் தேதி காலையில் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஞ்சித் சீனிவாசனை சரமாரியாக தாக்கினர். இதில், அவரது உடலில் 56 இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது முகம் முழுமையாக சிதைக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே ரஞ்சித் சீனிவாசன் உயிரிழந்தார். தாய், மனைவி, மகளின் கண்எதிரேகொடூரமாக அவர் படுகொலை செய்யப்பட்டது, கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை